கண்ணடைப்பான் -ஒரு சிறு ஆராய்ச்சி.case documentation in siddha medicine
சித்த மருத்துவம் படிக்கும் அனைவருக்கும் இருக்கும் சில புரியாத சந்தேகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் *சித்த மருத்துவம் எப்படி உருவானது?* சித்த மருத்துவத்தில் 4448 நோய்கள் உள்ளன என்றும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்கள் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று சித்த மருத்துவ நூல்களை படித்தவர்களுக்கு தெரியும். இப்படி ஒவ்வொரு நோய்க்கும் பெயர் வைத்து விளக்கப்பட வேண்டுமானால் இது பல நூற்றாண்டுகளாக வளர்ந்த ஒரு மருத்துவமுறையாக இருந்திருக்கவேண்டும். இப்பொழுது who, international classification of diseases(ICD) என்ற முறையின் கீழ் நோய்களை வகைப்படுத்தியுள்ளது அதுவும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மட்டுமே. இப்படி இருக்க சித்த மருத்துவத்தில் மட்டும் எப்படி 4448 நோய்கள் குறிகுணங்களோடும் பெயர்களுடனும் பிரித்து சித்தர்கள் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது ஒரு சந்தேகமாக பலநாள் உள்ளது. ஒரே ஒரு சித்தர் மட்டுமே இவற்றை வகைப்படுத்தி உள்ளாரா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. இவற்றுக்கு விடை அளிப்பது தான் இந்த பதிவு. நம் ஊர்களில் சில கோயில்களில் நேர்த்திகடனாக கண்மலர் பயன்படுத்தி பார்திருப்பீர். அதுமட்டுமல்லாமல் ஒரு