மருத்துவத்துறையை பொருத்தமட்டில் நூல்களும் அனுபவமும் இரு கண்கள் ஆகும். மருத்துவ முன்அனுபவம் இல்லாமல் சில பாடல்களை பொருள் புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் பொருள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. அனுபவ அறிவு நூல்கள் ஆராய்ச்சிக்கு எவ்வளவு பயன்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம். உதாரணமாக, கீழ்க்கண்ட அகத்தியர் நயனவிதி பாடலை காணலாம். " கூசும் விழியும் புகைந்திருக்கும் குறுகும் பார்வை தோற்றாது மாசுங் கண்ணும் பசித்திருக்கும் மயக்குங் குணங்கள் பலவாகும் தேசுங் குறையு மருட்சியுண்டாம் திறமாய்க் கருமம் செய்யாது ஏசுங் குணங்கள் வெள்ளெழுத்து என்றே சொல்லு இவை கண்டே." இப்பாடலில் முதல் வரி நமக்கு ஆழ்ந்த பொருளினை தரப்போகிறது. முதல் வரியினை மூன்று விதமாக பிரித்து பொருள் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று (கூசும் விழியும் புகைந்திருக்கும் குறுகும்) பார்வை தோற்றாது. இதன் பொருள்: கண்கள் கூசும், கண் புகைந்து காட்டும், கண்குறுகும் ( shrinkage of eyes ,may be pthsis bulbi) பார்வை தெரியாது. இரண்டு கூசும் விழியும் புகைந்திருக்கும் ( கு