Posts

சித்த மருத்துவத்தில் எண்களின் முக்கியத்துவம்

Image
  சித்த மருத்துவத்தில் எண்களின் முக்கியத்துவம் சித்த மருத்துவத்தில் சில முக்கிய எண்களை திரும்பத் திரும்ப நாம் கேள்விப்பட்டிருப்போம். 8   32   64   96 உதாரணமாக எட்டுக்கு எண்வகை தேர்வு அட்டாங்க யோகம் எண்பெரும் சித்திகள் முப்பத்திரண்டு உள்மருந்து 32 வெளிமருந்து 32 அறுபத்து நான்கு 64 வகை யோகம் 64 வகை சித்தி 64 கலைகள் தொண்ணூற்றாறு  96 தத்துவம் 96 தொடுவர்மம் ஏன் இந்த எண்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. இவையெல்லாம் வகைப்படுத்தியது யார் என்று பார்த்தால் சித்தர்கள்,யோகிகள் முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள். ஒரு விடயத்தை பாமரர் வரை புரிய வைக்க அவர்களுக்கு புரியும் சொல்லோ, பொருளோ கொண்டு உணர்த்த வேண்டியுள்ளது. அவ்வாறு மக்கள் அனைவரிடமும் இருக்கும் ஒரே பொருள் அவர்களுக்கு இயற்கை அளித்த அந்த உடல். மேலும், சித்தர்கள் உடம்புக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள். உதாரணமாக, திருமூலர், உடம்மை ஊர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறுகிறார். கண்களால் காணக்கூடிய ஒன்றை கொண்டு காணமுடியாததை கருதல் என்னும் அளவை மூலம் அறிய அறிவிக்க உதித்தது தான் இந்த எண்கள். இந்த பகுதியில் எட்டை மட்டும் எடுத்து கொள்வோம...

காணாத நூல்கள் -4

Image
அகத்தியர் பெருநூல் 10,000 காணாத நூல்கள் என்ற தலைப்பில் சித்த மருத்துவத்தில் நாம் தொலைத்த நூல்களை பற்றி பார்த்து வருகிறோம். நேரம் இருப்பதை பொருத்தும் அவசியம் கருதியும் பதிவு செய்து வருகிறேன்.  தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த சிறப்பு பதிவு  பொதுவாக சித்த மருத்துவ பொங்கல் சற்று வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக  போகி பண்டிகை   அந்த காலத்தில் பழைய நூல்களை எரித்து போக்கினோம். போகி கொண்டாடினோம்.ஆனால் இந்த நவ நாகரிக உலகத்தில் ஓலைச்சுவடிகளை DIGITAL PATENT கொடுத்தும், சித்த மருத்துவ நூல்களை ஆயுர்வேத நூல்களாக மாற்றியும்,வெளிநாட்டிடம் கொடுத்தும் நாம் நம் பாரம்பரிய நூல்களை போக்கி போகி பண்டிகை கொண்டாடுகிறோம். தமிழ் பொங்கல்   அதுபோல நம்மில் சிலர் தமிழ் மருத்துவம் பழமை வாய்ந்தது, தமிழ் மருத்துவம் சிறப்பு வாய்ந்தது மனிதர் தோன்றிய காலத்திலே தமிழ் மருத்துவம் தோன்றியது என்று தமிழின் பெருமையை பொங்கி பொங்கி கூறி பொங்கல் கொண்டாடுகிறோம். மாட்டுப் பொங்கல்   மாடு தான் என்றாலும் ஒரு போக்கு உண்டு மனிதருக்கோ அவ்வளவும் கிடையாது அப்பா என்பது அகத்தியர் வாக்கு.  அதாவது மாடு த...

காணாத நூல்கள் -3

  நீராடும் மர்மம் அல்லது ஸ்நான விதி            சித்த மருத்துவம் என்னும் பெயர் இன்னும் நிலைத்திருக்க காரணம் நம்மிடம் உள்ள அறிவு பொக்கிஷம் ஆகிய நூல்களே.            சித்த மருத்துவர்களாகிய நாம் Ancient Wisdom of Siddha Medicine in Preventive & Promotive Health Care என்று அடிக்கடி சித்த மருத்துவம் நோய் தடுப்பு முறையில் சிறந்து விளங்குகிறது என்று தம்பட்டம் அடிக்கிறோம்.              மறுப்பது உடல் நோய் மருந்தெனலாகும் என்று திருமூலரை வாய் வார்த்தைக்கு மட்டும் இழுத்து நோய் தடுப்பு துறைக்கு பயன்படும் மூலமாகிய நூல்களை தொலைத்துவிட்டோம், என்பது தான் நாம் வருந்தத்தக்க விஷயம்.              அப்படி நாம் இழந்த ஒரு நூல் "நீராடும் மர்மம் அல்லது ஸ்நானம் விதி" .இந்நூலினை அப்துல் குதூஸ் ராவுத்தர் பு.நா.வே என்பவர் 1937 அன்று கிரவுன் அச்சியந்திரசாலை,சென்னையில் பதிப்பித்துள்ளார்.இது வெறுமனே 8 பக்கங்கள் உடைய நூல்.ஆனால் நீராடும் விதி என்பது நோய் தடுப்புக்கு மிகவும் அவசியமான ஒரு...

காணாத நூல்கள் - 2

கிருமி சிந்தாமணியும் குண தீட்சை மர்மமும் கொரோனா காலத்தில் ஒரு சந்தேகம். கிருமி நோய்கள் பற்றி சித்த மருத்துவ நூல்களில் மருத்துவம் கூறினாலும். தனி நூல் உள்ளதா என்று ஒரு சந்தேகம். ஆம் உள்ளது. கிருமி சிந்தாமணியும் குண தீட்சை மர்மமும் 1909 இல் குஞ்சி பண்டிதர் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எங்கு உள்ளது? யாருக்கு தெரியும் பல நூல் நிலையங்கள் சென்றும் இப்படி ஒரு நூல் எனக்கும் கிடைக்கவில்லை. பாவம் சித்த மருத்துவ வல்லோருக்கும் கிட்டவில்லை. இந்நூலில் என்ன தகவல் இருக்கும் என்பதும் தெரியவில்லை. இந்த நூல் இருந்திருந்தால் தொற்று காலத்தில் பயன்பட்டிருக்குமோ? இருக்கலாம். நீங்கள் இந்த நூலை கண்டால் கையோடு கொண்டு வாருங்கள். இது siddha microbiology என்ற துறைக்கு கூட நம்மை அழைத்து செல்லலாம். நன்றி உங்கள் அன்பு மருத்துவன் இரா. சண்மு

காணாத நூல்கள் - 1

ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் - -500 சித்த மருத்துவத்தில் மறைந்த நூல்கள் பல. அதை மீட்க காணாத நூல்கள் பற்றி எழுத விழைகிறேன். அதில் முதல் ஒன்று 1.ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் - -500 சித்த மருத்துவத்தில் ஏக மூலிகை பிரயோகம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. அதாவது ஒரே ஒரு மூலிகை வைத்து நோயை தீர்ப்பது. இதற்கான மூலநூல் தனியாக இல்லை என்பது சித்த மருத்துவ சமூகத்தின் நம்பிக்கை. ஆனால் நாம் அதற்கான நூல்களை தொலைத்து விட்டோம் என்பது தான் உண்மை.  ரோமரிஷி ஏக மூலிகை வைத்தியம் 500 என்ற ஏடு திருநெல்வேலி மாவட்டம் அத்வைதனானந்தர் என்பவரிடம் இருந்து ரீஜனல் ரிசர்ச் சென்டர், ஆயுர்வேதா பெங்களூரை சேர்ந்தவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.இதில் மொத்தம் 205 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.இந்நூல் பற்றி ஆர்.சுதா மற்றும் எச்.எஸ்.லட்சுமி நாராயணன் என்பவர்கள் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை 1990 இல் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி அரங்கு,திருவனந்தபுரத்தில் வெளியிட்டனர்.ஆனால் இந்த நூலின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.  இந்த நூலின் சிறப்பு அம்சங்கள் சில 1.தனி மூலிகை தைலங்கள் 2.மூலிகை தைலங்களுடன் ஒன்று இரண்டு சரக்குகள் மட்...

சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும் நூல்கள் பதிப்பும் - 1

Image
அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் உள்ள வற்ம நூல்கள்  அனைவருக்கும் இனிய சித்தர் தின நல்வாழ்த்துக்கள்.💐 சித்த மருத்துவத்தில் நூல்கள் பதிப்பு மிகவும் அவசியமானது. இன்று சித்த மருத்துவத்தின் பிரிவுகள் பல உருவாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் துறை சார்ந்த வளர்ச்சிக்கு நூல்களின் பின்புலம் மிகவும் அவசியமானது.  உதாரணமாக, வற்ம மருத்துவப் பிரிவில் உள்ள திலர்த காலம் பற்றிய புள்ளியை ஆய்வு செய்யும் ஒருவன் முதலில் திலர்த காலம் எந்தெந்த நூல்களில் பேசப்பட்டுள்ளது என்பதை மொத்தமாக தொகுத்த பின்னரே அதில் ஆராய்ச்சி செய்ய ஏதுவாக இருக்கும் .அப்படியானால் திலர்த காலம் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவன் வர்ம நூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். அதற்கு முதலில் அந்த நூல்கள் வெளிவந்திருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வெளிவந்த நூல்கள் வெளி வராத நூல்கள் என்ன என்பது பற்றிய அறிவு இருந்தால் தான் எந்தெந்த நூல்களை பதிப்பிக்க வேண்டும் எங்கே அந்த நூல்களை சென்று பெற வேண்டும் என்று தேட இயலும். வற்ம நூலகள் யாரும் தர மாட்டார்கள் என்று உட்கார்ந்த இடத்திலிருந்து கூவல் செய்யலாம். ஆனால் உண்மை ச...

காலத்துக்கு பதில் கூறும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி -1

       அனைவருக்கும் கண்டாரை நோக்கிக் கருத்தோடு நில்லாதவனின் சித்தர்கள் தின நல்வாழ்த்துக்கள் .         இன்று சித்தர் தினம் பல்வேறு சித்த மருத்துவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.         இதில் எனக்கு உண்டான கேள்வி          1.சித்தர்கள் இதனை என்ன கண்ணோட்டத்தில் காண்பார்கள்?.         2.சித்தர் தின கொண்டாட்டத்தை விரும்புகிறார்களா இல்லையா? என்பதுதான் எனது கேள்வி.         முதலில் சித்தர்கள் இக்காலகட்டத்தில் இருக்கிறார்களா? என்பதை அறிவது முக்கியம் . அவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று காரைச் சித்தர் பாடலில் கூறியுள்ளார்.                 "பூரணர்கள் மறைந்துள்ளார் அவரை காணே"                   அதாவது சித்தர்கள் போன்ற மனிதர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக மக்களோடு இருப்பார்கள். அவர்களை நம் உண்மையான தேடலின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும்.            ...