அறிவர் மருத்துவத்தில் நாடி -1
அறிவர் மருத்துவத்தில் நாடி (Pulse diagnosis in siddhar's medicine) நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கும் பொழுது சித்தமருத்துவம் செய்கிறேன் என்று கூறினால் போதும் நாடி பார்க்க தெரியுமா? என்பது அடுத்ததாக வரும் கேள்வி.அப்படி சித்தமருத்துவரை அடையாளம் காட்டுவதாக நாடி உள்ளது. அந்த நாடி பார்ப்பதை மாயாவி வித்தையாக பலர் கருதுகின்றனர். நாடி பார்ப்பது அறிவுகலை சார்ந்தது.நாடியில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது என்பது பொது மக்களுக்கு தெரிந்தால் தான் அது எவ்வளவு நுணுக்கமானது என்பது புரியும். நாடி பார்க்க மருத்துவரை நாடி வருவர். அப்பேற்பட்ட நாடியில் இருக்கும் பல்வேறு பிரிநிலைகளை நூல்கள் ஆராய்ச்சி மூலம் வெளிப்படுத்துவதே இப்பதிவின் நோக்கமாக கொண்டு வெளிப்படுத்துகிறோம். நாடி பார்ப்பதில் பல்வேறு பாரம்பரியங்கள் இருப்பதாக தோன்றுகிறது. பொதுவாக அனைவரும் அறிந்தது கரநாடியை பிடித்து மூன்று பிரிவாக பிரித்து அதை வாதம் பித்தம் கபம் எனும் முத்தா துக்களை அறிந்து நோய் நிலையை கூறுவது. ஆனால் சித்த மருத்துவம் இதோடு முடிந்துவிடவில்லை. அது பல்வேறு கூறுகளாக நாடி பரிசோதனையை கொண்டு