கண்ணடைப்பான் -ஒரு சிறு ஆராய்ச்சி.case documentation in siddha medicine

சித்த மருத்துவம் படிக்கும் அனைவருக்கும் இருக்கும் சில புரியாத சந்தேகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் *சித்த மருத்துவம் எப்படி உருவானது?* 


சித்த மருத்துவத்தில் 4448 நோய்கள் உள்ளன என்றும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்கள் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று சித்த மருத்துவ நூல்களை படித்தவர்களுக்கு தெரியும். இப்படி ஒவ்வொரு நோய்க்கும் பெயர் வைத்து விளக்கப்பட வேண்டுமானால் இது பல நூற்றாண்டுகளாக வளர்ந்த ஒரு மருத்துவமுறையாக இருந்திருக்கவேண்டும்.

இப்பொழுது who,

international classification of diseases(ICD) என்ற முறையின் கீழ் நோய்களை வகைப்படுத்தியுள்ளது அதுவும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மட்டுமே. இப்படி இருக்க சித்த மருத்துவத்தில் மட்டும் எப்படி 4448 நோய்கள் குறிகுணங்களோடும் பெயர்களுடனும் பிரித்து சித்தர்கள் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது ஒரு சந்தேகமாக பலநாள் உள்ளது. ஒரே ஒரு சித்தர் மட்டுமே இவற்றை வகைப்படுத்தி உள்ளாரா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது.


இவற்றுக்கு விடை அளிப்பது தான் இந்த பதிவு.


நம் ஊர்களில் சில கோயில்களில் நேர்த்திகடனாக கண்மலர் பயன்படுத்தி பார்திருப்பீர். அதுமட்டுமல்லாமல் ஒரு குழந்தைதொட்டில் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் அதில் தனது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதிகட்டி வைப்பார்.இதற்கு பின் மூடநம்பிக்கை இருப்பது போல் இருந்தாலும் , இது தான் இன்று நாம் படித்து கொண்டிருக்கும் மருத்துவ நூலுக்கு ஆதாரம் என்றால் யார் தான் மறுப்பார்.



நோய் வரும் வழியை அடைத்தலுக்கு(தடுத்தல்) நமது முன்னோர் கைகொண்ட சாதனத்துக்கு கண் அடைப்பான் என்று பெயர்.


பிணி ஏடு என்பது நோயாளிக்கு பக்கத்தில் விளக்கம் குறிப்பதற்காக அமைப்பது. இப்போது பிணி ஏடு அல்லது பிணி ஓலை என குழந்தைகள் பிணிபட்டபோது தொட்டில் கட்டி வைக்கும் பனையோலைக்கு இப்பெயர். நோயாளிக்கு பக்கத்தில் இருப்பவர் நோயாளியிடம் காணும் குணங்களை ஓலையில் எழுதி பக்கத்தில் கட்டி விடுவர்.தான் கண்ட குணங்களையும் தீர்வின் விவரங்களையும் குறித்து எழுதி வைப்பர் நோய் தீர்ந்தவுடன் அந்த ஓலையை ஒரு பொது மடத்திலாவது கோயிலாவது சேர்த்து விடுவர். நோய் தீர்ந்த அறிகுறிக்கு எந்த உறுப்பு நோய்வாய்ப்பட்டதோ அது போல் வெள்ளி ,மண் முதலியவற்றால் செய்யப்பட்டதற்கு கண் அடைப்பான் என்று பெயர்.(case record)



கண் அடைத்தல் என்பதற்கு துவாரம் அடைத்தல் அல்லது வழியடைத்தல் என்பது பொருள்.


*பெருவழி யறுகையு நெருஞ்சியு மடர்ந்து

கண்ணடைத் தாங்கு*

மணிமேகலை  12-60


இப்பாடலில் வழி அறுகாலும் நெருஞ்சி யாலும்  அடைந்தது என்பது பொருள்.


நோய் வரும் வழியை அடைத்த அதற்கு கண் அடைப்பான் என்ற உருவங்கள் காரணமாய் இருப்பதால் காரணப் பெயராயிற்று. மடம் கோயிலில் உள்ள துறவிகள் உருவங்களையும் ஏடுகளையும் கவனித்து பயின்று அதன் நோய் பரவாது இதற்கு பின்னால் ஏற்படாது இருக்கும் பொருட்டும் ஆன முயற்சிகளை செய்வர்.(preventive measures)



இந்த வரலாறு இதோடு மட்டுமில்லாமல் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க தேசத்திலிருந்து எஸ்கலேபியஸ் என்பவர் மலையாள கரைவழி தமிழ்நாட்டுக்கு வந்து தான் கையாண்டு வந்த அரிய முறைகளை கண்டு கிரீஸ் தேசம் முழுவதும் பரப்பியதாகவும் அதனால் மக்கள் நோயின்றி வாழ முடிந்ததால் அவரை கடவுள் அவதாரம் என போற்றியதாகவும் கவிதைகள் பாடியதாகவும் அவருக்கு கிரேஸ் முழுவதும் கோவில்கள் இருந்ததாகவும் அவரது மாணாக்கர் மரபிலும் திருக்கோயிலில் இருந்து எஸ்கலேபியஸ் பகவானிடமிருந்து பெற்ற ஞானத்தை ரகசியமாகவே வைத்துக் கொண்டு பேதி மருந்து வாந்தி மருந்து முதலிய அவர் முறைகளை மருத்துவம் செய்தனர் என்றும் நோய் நீங்கிய மக்கள் அக்கோயிலுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வதாகவும் சிலர் கூறுகின்றனர்.(போதி தர்மர் கதையை போல்)


நோய் நீங்குவதற்கு அறிகுறியாக தந்தம் கட்டை இவற்றில் தங்கள் நோய்களை குறித்து கோயில்களில் கொடுப்பார்கள் பூசாரிகள் அதில் தாங்கள் கொடுத்த மருந்து பெயரை எழுதி பத்திரமாக சேர்த்து வைப்பார்கள்.

கிமு 5 ஆவது நூற்றாண்டில் கிரேக்கர்கள் நாகரீகத்தில் உச்ச நிலையை அடைந்திருந்தனர். அக்காலத்தில் ஹிப்போகிரேட்டஸ் என்ற வைத்திய நிபுணர் எஸ்கலேபியஸ் பகவான் கோயிலில் பூசை செய்து வந்தார். அறிவுமிக்க ஹிப்போகிரேட்டஸ் எல்லா கோயில்களிலிருந்து நோய் தீர்ந்தவர்களால் கொடுக்கப்பட்ட கட்டைகளில் எழுதியதை பயின்று அவற்றை ஒழுங்குபடுத்தினார். பூசாரியாய் இருந்ததால் ரகசியமாக வைத்திருந்த இப்பொருட்கள் இவர் கைக்கு எட்டியது. தமிழ்நாட்டுக்கும் வேறு பல நாடுகளுக்கும் சென்று மருந்து முறைகளை தங்கள் நாட்டுப் பழக்க வழக்கங்களுக்கும் கோயிலில் எடுத்து குறித்த அனுபவத்துக்கும் ஒட்டி அநேக நூல்களை எழுதினார்.அதனால் இன்றும் அவரை மேனாட்டு வைத்திய தகப்பன் என்று கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் இப்பழக்கம் காலமானதால் நோய்ப்பட்ட குழந்தை தொட்டிலில் ஏதோ சில எழுதிய ஜோடியை கட்டுவதும் சாமிக்கு வேண்டிக்கொண்டு நோய் நீங்க கண் காது கால் போன்ற உறுப்புகளை களிமண் முதலியவற்றால் செய்து சில கோயில்களில் வைப்பதும் ஆகிய இவற்றோடு நின்று விட்டதை காணலாம். பிணி ஏடு தற்கால ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பக்கத்தில் சுவற்றில் தொங்க விட்டிருப்பதை காணலாம்.


இப்படி ஒரு சமூகமே ஒரு காலத்தில் case documentation க்கு உதவியதாக இருந்துள்ளனர்.

இன்று cross sectional survey

Pharmacovigilance

Google forms

போன்றவை நோய்யை முறை செய்ய மருந்தின் விளைவுகளை அறிந்து கொள்ள பயன்பட்டாலும்.

கண்ணடைப்பான் முறை மருத்துவ நோய் குறிப்பு முறைகளுக்கு முன்னோடி தான் என்று சொல்லுவதோடு அல்லாமல் கண்ணடைப்பான் அக்கால நோய் போக்கும் வழியாக இருந்துள்ளது.


முதலில் தோன்றிய மருத்துவம் மந்திர மருத்துவம் என்பது பல வல்லுநர் ஒத்துக் கொண்ட ஒன்று. அப்படி இந்த நோய்வாய்ப்பட்ட உறுப்பை தாந்திரீகம் வாயிலாக மந்திரம் வாயிலாக  அக்காலங்களில் சரி செய்து வந்துள்ளனர்.இதன் வளர்ச்சியே இப்பொழுது மணி மந்திர ஔஷதம் எனும் முப்பரிமான நிலையை சித்த மருத்துவம் எட்ட காரணம் என கருத கண்ணடைப்பான் இடமளித்துள்ளது. இன்றும் இந்த முறை நாகராஜா கோயில், நாகர்கோயிலில் காணமுடிகிறது.

அகத்தியரே மருத்துவன் தீது இல்லா கக்கிஷம் (மாந்திரீக நூல்) பல படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


எது எப்படியோ இங்கு கூறிய செய்திகளுக்கு வரலாற்று ஆதாரம் குறிப்பிட்ட அளவு இல்லையென்றாலும் நூல் ஆதாரம் உள்ளது என்று சொல்லி கண்ணடைக்காமல் இப்பதிவை படித்தமைக்கு நன்றிகள் கூறி விடைபெறுகிறேன்.


உங்கள் அன்பு மருத்துவர்

இரா.சண்மு

 

Comments

  1. சிறப்பான செய்தி

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள்🙏

    ReplyDelete
  3. Good work and thank you for the info Doctor....

    ReplyDelete
  4. மூட நம்பிக்கை என்ற பெயரால் அடைக்கப்பட்டிருந்த நம் கண்களை மரு. சண்மு கண்ணடைப்பானின் பின் உள்ள நோய்களின் பதிவுகள் சார்ந்த வரலாற்று ஆய்வின் மூலம் திறந்துவிட்டார்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் டாக்டர் சாமுவேல்

      Delete
  5. தங்களது ஆராய்ச்சி மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்! 💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1

காணாத நூல்கள் -4

அறிவர் மருத்துவத்தில் நாடி -1