சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும் நூல்கள் பதிப்பும் - 1

அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் உள்ள வற்ம நூல்கள் 

அனைவருக்கும் இனிய சித்தர் தின நல்வாழ்த்துக்கள்.💐

சித்த மருத்துவத்தில் நூல்கள் பதிப்பு மிகவும் அவசியமானது. இன்று சித்த மருத்துவத்தின் பிரிவுகள் பல உருவாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் துறை சார்ந்த வளர்ச்சிக்கு நூல்களின் பின்புலம் மிகவும் அவசியமானது. 

உதாரணமாக, வற்ம மருத்துவப் பிரிவில் உள்ள திலர்த காலம் பற்றிய புள்ளியை ஆய்வு செய்யும் ஒருவன் முதலில் திலர்த காலம் எந்தெந்த நூல்களில் பேசப்பட்டுள்ளது என்பதை மொத்தமாக தொகுத்த பின்னரே அதில் ஆராய்ச்சி செய்ய ஏதுவாக இருக்கும்.அப்படியானால் திலர்த காலம் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவன் வர்ம நூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். அதற்கு முதலில் அந்த நூல்கள் வெளிவந்திருக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல் வெளிவந்த நூல்கள் வெளி வராத நூல்கள் என்ன என்பது பற்றிய அறிவு இருந்தால் தான் எந்தெந்த நூல்களை பதிப்பிக்க வேண்டும் எங்கே அந்த நூல்களை சென்று பெற வேண்டும் என்று தேட இயலும். வற்ம நூலகள் யாரும் தர மாட்டார்கள் என்று உட்கார்ந்த இடத்திலிருந்து கூவல் செய்யலாம். ஆனால் உண்மை சித்தர் பாடல்களில் உள்ளது 

"உரியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணெய் தேடும் அறிவில்லாத மாந்தரோடு அணுகுமாற தெங்கனே"


என்ற சிவவாக்கியர் பாடல் இதற்கு உதாரணம்.

தமிழ்நாட்டில் உள்ள ஆவண காப்பகத்தில் இருக்கின்ற எத்தனை சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் இன்னும் பதிப்பிக்காமல் இருக்கிறது?இந்த விவரம் நமக்கு நூல் பதிப்பு செய்ய போதுமானது.பதிவில் நாம் வெளியிட உள்ளது "சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி எப்படி நூல் பதிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்பதே.


இதற்கு நாம் எடுத்துக் கொண்டத் தலைப்பு "அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் உள்ள வற்ம நூல்கள்"


50 வருடம் மேலாகியும் வற்ம மருத்துவம் சித்த மருத்துவத்துறைக்கு என்று பேசுவோரும். ஆவண நூலக நூல்களை வெளியிடவில்லை என்பது கவலைக்குரியது.

அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் மொத்தம் வற்ம மருத்துவம் தொடர்பான 21 நூல்கள் உள்ளன.

அவற்றுள் ஓலைச்சுவடியாகயுள்ள

1.வர்ம சாத்திரம் 61 பாடல் 

2.வர்மக்கண்ணாடி - 1 (133 பாடல்) 

3.வர்மக்கண்ணாடி - 2 (312 பாடல்) 

4.வர்ம பீரங்கி -100 பாடல்

5.வர்ம் பீரங்கி திறவுகோல் 16 பாடல் 

6.வர்ம அடங்கல் முறை 112 பாடல் 

7.வர்ம வைத்தியம் 19 செய்யுள் பின் உரைநடை பின் 56 செய்யுள் கொண்ட நூல் 


இந்த ஏழு நூல்களும் வர்ம தொகுப்பு என்ற இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் இடம்பெற்றுள்ளன.


8.வர்ம சூத்திரம் என்ற 101 பாடல் கொண்ட நூல்
இந்தப் பிரதியையும் மேலும் இரண்டு பிரதிகளையும் மையமாக வைத்து செ.ஜான் செல்வராஜ் அவர்கள்1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ளார்.





ஆக மொத்தம் 21 நூல்களில் ஓலைச்சுவடிகளாக உள்ள எட்டு நூல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் வெளிவராத ஓலைச்சுவடிகள்


9.வர்மமாணி சாத்திரம்

10.வர்மக்கலை

11.வர்ம கண்டி சூத்திரம்

12.வர்ம அளவு நூல் பிரமாணம் 

13.அகத்தியர் வர்ம சூத்திரம்

14.ஒடிவு முறிவு சாரி


ஆகிய ஆறு சுவடிகள் வெளிவரவில்லை.

இதில் வர்ம அளவு நூல் என்ற நூலினை மரு.கண்ணன் ராஜாராம் அவர்கள் அவரிடம் உள்ள பிரதியினை கொண்டு வெளியிட்டார்

மேலும் , காகிதச்சுவடியாக

15.வர்ம வைத்தியம்



16.வர்ம அளவு நூல்



17.வர்ம பீரங்கி



18.வர்ம சூத்திரம்



19.வர்மக்கண்ணாடி - 1



20.வர்மக்கண்ணாடி - 2



21.ஒடிவு முறிவு சாரி



7 நூல்கள் உள்ளன.

இவையாவும்
ஏற்கனவே உள்ள ஓலைச்சுவடியின் பிரதிகள் ஆகும்.

ஆக மொத்தத்தில் சித்த மருத்துவ வளர்ச்சியில் பங்கெடுக்க விரும்புவோர்.இந்த வெளிவராத ஆறு நூல்களையும் (9,10,11,12,13,14) வெளிக்கொண்டு வர முயற்சிக்கலாம்.சித்தர் திருநாளை பயனுள்ளதாய் கொண்டாடுவோம்.


உங்கள் அன்பு சித்த மருத்துவன்

இரா.சண்மு

Comments

Popular posts from this blog

சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1

காணாத நூல்கள் -4

அறிவர் மருத்துவத்தில் நாடி -1