மருத்துவ காலநெறி ஆராய்ச்சி

 மருத்துவ ஜோதிடம் 2

(மருத்துவ காலநெறி ஆராய்ச்சி)


சித்த மருத்துவம் மூடநம்பிக்கைகளை அழித்து உண்மை இயற்கை இயக்கங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.

விஞ்ஞானம் இயற்கை ஆராயும் வகையில் வேறு யாராலும் ஆராய இயலாது.ஆனால் மெய்ஞ்ஞானம் இயற்கை என்னவென்று ஆராய்ந்து முடித்தது.அதில் ஒன்றுதான் ஜோதிடம்.


நிலையான ஒன்றை ஆராய்வது மெய்ஞானம் நிலையற்றவை ஆராய்வது விஞ்ஞானம் என்பது அனைவருக்கும் தெரியும்.

சித்த மருத்துவம் விஞ்ஞானத்தில் விளக்க இயலாத பல விந்தையை வைத்துள்ளது.


அதில் ஒன்று தான்

காலம் 

இந்த தலைப்பு ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது.

சோதிடம் என்பதற்கு பதில் காலநெறி என்ற சொல் உங்களுக்கு விளக்க ஏதுவாக இருக்கும்.


அகத்தியர் தன் ஞான பாடல் ஒன்றில்,

மாடு தான் என்றாலும் ஒரு போக்கு உண்டு.

மனிதருக்கும் அப்படியும் கிடையாதப்பா என்று கூறுகிறார்.


இது நெறி என்னும் கோட்பாடுக்கு எடுத்துக்காட்டு.


மாடு காலையில் எழுந்து புல்லினை மேய்ந்து வீடு திரும்பும்.இது அதன் போக்கு அல்லது நெறி என்று கூறலாம்.இதன் மூலம் மாடு நாளை என்ன செய்யும் என்பதை கணிக்கலாம்.


இது போன்ற ஒரு அறிவு தான் "கால நெறி".

சூரியன் இன்னும் 10 மணிநேரத்தில் உதிக்கலாம் என்று இரவு 8 மணிக்கே நம்மால் கூற இயலும்.இவை சூரியன் என்னும் கிரகத்தின் வாயிலாக நமக்கு கிடைத்த அறிவு.இது ஒருபோதும் தவறுவது இல்லை.இதுதான் காலநெறி.

நாம் அனைவரும் காலநெறி ஆராய்ச்சியாளர் தான்.


இயற்கை அறிவாகிய 64 கலைகளும் இயற்கை என்னும் ஒரு பொருளால் கட்டுப்படுகிறது. அதுபோல் மருத்துவமும் இயற்கை அறிவு காலநெறியும் இயற்கை அறிவு.ஆதலால் இரண்டுக்கும் இயற்கையாய் தொடர்பு உண்டு.



சித்தர்கள் வாக்குபடி மருத்துவனுக்கு ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டும்.ஏன்?


1.நோயினை கணிக்க.


2.எவ்வளவு நாள் மருத்துவம் கொடுக்கவேண்டும்.


3.எப்படிப்பட்ட மருத்துவம் கொடுக்க வேண்டும்.(மூலிகை,தாது,உள்ளமருந்து)


4.நோயாளிக்கு மறைந்திருக்கும் நோயை அறிய


5.ஸ்கேன் பரிசோதனை செய்யும் முன் ஜோதிடம் பார்த்து ஸ்கேன் செய்து விரயத்தை தவிர்க்க


6.நோயாளிக்கு இனி வரும் நோயை கணிப்பதற்காக.


7.நோயாளி சொல்ல மறந்த பண்டைய நோயை கருத்தில் எடுத்து மருத்துவம் செய்ய


8.சித்தர்கள் சொன்ன கருமகாண்டம் என்ற நூலினை பயன்படுத்த


9.மருந்துகளின் வீரியத்தை தேர்வு செய்ய.


10.காயகல்ப மருந்துகளை தேர்வு செய்ய.


11.சமூகத்தில் இனி வரும் நோய்களை கணிக்க.


12.தேவைக்கு ஏற்ப மருத்துவனும் மருந்து நிறுவனங்களும் எந்தநோய் எந்த காலத்தில் வரும் என்பதை கணித்து மருந்து செய்ய


13.மருத்துவனுக்கு எந்த நோயுள்ள நோயாளி வருவான்.மருத்துவன் எந்த நோயில் ஆ முதல் ஃ வரை படித்திருக்க வேண்டும் என்பதையும்


14.மருத்துவன் எந்த நோயில் சிறப்பு மருத்துவனாய் வந்தால் எளிதில் பணம் ஈட்ட முடியும் எந்த நோயில் வம்பாடி பணம் பெறுவான் என்பதையும்.


15.நாடிக்கணிப்பு போன்றவற்றுக்கும்


16.மரணம் கணித்தல்,மருத்துவன் ஆயுளறிவனாக செயல்பட 


17.திருமூலர் சொன்ன படி நோயினை மறுப்பதற்கு


18.தொற்று காலங்களில் புதிய நோய்தொற்றுக்கு, இந்த சித்த மருந்து நேர்மருந்து என்று உரைக்க.....


மேலும் இது போல பற்பல உண்டு.காலநெறி ஆராய்ச்சியில் நான் குறைக்குடம் என்பதால் என்னால் முடிந்த அளவு ஆடி(எழுதி) சிறிது நீரை(அறிவை) உங்கள்  மீது துளித்துள்ளேன்.

இன்னும் கற்று ஊற்றாகி வெளிப்படுவேன்.


சித்த மருத்துவம்,அதாவது அறிவர் மருத்துவம் ஆயுளறியும் கலையாகிய, சோதிடம் இன்றி முழுமைபெறாது.


காலநெறி அறிந்து நோய்களை களையெடுப்போம்👍


நன்றி


உங்கள் அன்பு மருத்துவன் இரா.சண்மு






Comments

  1. காலநெறி அறிந்து நோய்களை களையெடுக்க நிச்சயம் முயல்வோம்...களையேடுப்போம்♎💯

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1

காணாத நூல்கள் -4

அறிவர் மருத்துவத்தில் நாடி -1