siddha literary research in siddha politics
பல வருடங்களாக இருந்த ஒரு மிகப்பெரிய சந்தேகம்.
தினம் தினம் சித்த மருத்துவத்துக்கு என்று பல பிரச்சனைகள் வந்தவண்ணம் இருப்பதை கடந்த ஆறு வருடமாக சந்தித்து வந்த வண்ணம் உள்ளேன்.சமூக ஊடகங்களில் சித்த மருத்துவத்தை போலி மருத்துவம் என்று பரப்புரை செய்யும் தனிநபர் செயல்கள்,போலி மருத்துவர்கள் ஒரு புறம்,சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என்று கூறும் மீடியா ஒரு புறம்,அலோபதி மருத்துவர்களின் தவறான பரப்புரை,சித்த மருத்துவத்திற்கு பெரிய ஆராய்ச்சி நிறுவனம் இல்லாதது,அரசு வேலைக்காக காத்திருந்து ஓய்ந்து போன மருத்துவர்கள்,ஆயுர்வேத நிறுவனங்கள் சித்த மருத்துவம் மற்றும் வற்ம மருத்துவத்தை அபகரிக்கும் முயற்சி
,நூல்கள் மற்றும் வற்ம அறிவை வெளிநாட்டுக்கு விற்கும் சித்த மருத்துவர்கள்,சித்த மருத்துவ மருந்தை ஆயுர்வேத பொருள் என்று வணிக நிறுவனம் கண்முன்னமே விற்கும் நிலை,
இவையெல்லாம் தடுக்க சித்த மருத்துவ ஆளுமைகள் அல்லது சித்த மருத்துவ நிறுவனங்கள் இல்லையா என்பது என் கேள்வி அல்ல.
இவை நடக்க சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சி இல்லாததும் தான் மிகப்பெரிய காரணம் என நான் கண்டுபிடித்த சில விடயங்களை காலத்தின் கட்டளை கருதி
"சித்த மருத்துவ உள்வெளி அரசியலும்
நூல்கள் ஆராய்ச்சியும்"
"siddha literary research in siddha politics" என்ற தலைப்பில் யார் மனதையும் புண்படுத்தாற் போல உள்ளதை உள்ளபடி எழுத ஆயத்தமாக உள்ளேன்.இதில் பல உண்மைகள் வெளி வரலாம் பல உண்மைகள் கசக்கலாம்.நண்பர்கள் நீங்கள் தரும் ஆதரவை கமெண்ட் செய்யுங்கள்.உங்களின் ஆதரவை பொறுத்து எழுதலாமா என்று முடிவு செய்கிறேன்.
ஒரு செயல் செய்யும் முன் அது பலருக்கு பயனுள்ளதாய் இருத்தல் வேண்டும்.அரசியல் பற்றி பேசுவது தெளிவுக்காக.சித்தம் தெளிந்தவர்கள் சித்தர்கள்.அவர்கள் மருத்துவத்தில் நடக்கும் அரசியல் தெளிந்தால் தெரிந்தால் மாற்றம் நிச்சயம்.
உங்கள் அன்பு மருத்துவர்
இரா.சண்மு
Kandipaga solalam anna. Ena enna nadakudhu most of the people en siddha students palaruke theriyadhu. So pls adha pathi konjam solunga anna . Thank you
ReplyDelete